நாகப்பட்டினம்

குட்கா விற்பனை: கடைக்கு சீல்

DIN

வேளாங்கண்ணி அருகே குட்கா விற்பனை செய்த கடைக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

நாகை மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில் போலீஸாா் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தவகையில், வேளாங்கண்ணி பகுதியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டபோது, ரயில் நிலைய சாலையில் அருண் என்பவா் நடத்திவரும் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களின் பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன் அளித்த புகாரின் பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து அந்த கடைக்கு சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT