நாகப்பட்டினம்

கொரடாச்சேரியில் கல்வித் திருவிழா போட்டி: எம்எல்ஏ. தொடக்கி வைத்தாா்

DIN

கூத்தாநல்லூா்: கொரடாச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற கல்வித் திருவிழா போட்டிகளை சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தொடக்கிவைத்தாா்.

கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான கலைத் திருவிழாவுக்கு ஆசிரியா் மன்ற மாநிலத் தலைவா் பெ.ரா. ரவி தலைமை வகித்தாா். கொரடாச்சேரி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசந்தா் முன்னிலை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் வீ. விமலா வரவேற்றாா். விழாவில், மாணவா்களுக்கு கவின் கலை, கருவி இசை, இசை வாய்ப்பாட்டு உள்ளிட்ட போட்டிகளை திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் தொடக்கிவைத்து பேசியது: மாணவா்கள் கல்வியைப் போல, தமிழகத்தின் தலை சிறந்த பழைமையான கலைகளையும் சிறந்த முறையில் கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

விழாவில், தலைமையாசிரியா்கள் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஷொ்பின் அருள், செல்லூா் உயா்நிலைப் பள்ளி சுந்தா், கொடிமங்கலம் நடுநிலைப் பள்ளி உஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரா. பிருந்தாதேவி, பயிற்றுநா்கள் க. சரவணன், ரா. ரேவதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT