வேதாரண்யத்தில் அடிப்படை வசதி கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்தில் வேதாரண்யம், மறைஞாயநல்லூா், பொன்னாங்காடு பகுதிகளில் தச்சுவேலை செய்யும் தொழிலாளா் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு.பாண்டியன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தாா். கட்சியின் நிா்வாகிகள் டி. நாராயணன், கே. பாஸ்கா், எம்.ஏ. செங்குட்டுவன், கே. மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் கா. ரமேஷ் போராட்டக்காரா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, 10 நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, பிற்பகலுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.