பூம்புகாா் தருமகுளம் பகுதியில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் காவிரி ஆற்றங்கரையிலிருந்து காவடிகளை சுமந்து வந்தனா். இதைடுத்து, கோயில் நுழைவு வாயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.