திருவெண்காடு அருகே சன்னான்னோடை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் ரவிகுருசாமி, தஞ்சை மண்டல விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளா் செந்தில்குமாா் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனா்.