75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வீடுதோறும் தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா தலைமையில், பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளில் 2,562 வீடுகளுக்கு தேசியக் கொடி மற்றும் கொடியை பராமரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன், பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.