நாகப்பட்டினம்

முட்டம் சந்திரமாரியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

நாகையை அடுத்த நாகூா் முட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சந்திரமாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. பெருவிழா கொடியேற்றம் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. விழா நிகழ்ச்சியாக, தினமும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும், வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காலை 6 மணிஅளவில் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மங்கள வாத்திய முழக்கங்களுடன் தோ் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT