நாகப்பட்டினம்

நாகையில் 16, மயிலாடுதுறையில் 9 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் 16 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,897-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 16 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 212-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23,192-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 27 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 158-ஆக உள்ளது.

கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு புதன்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT