நாகை மாவட்டத்தில் 16 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,897-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 16 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 212-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23,192-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 27 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 158-ஆக உள்ளது.
கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு புதன்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.