திருமருகல் மின்வாரிய அலுவலகத்தில் நாகை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அங்கு பணியிலிருந்த ஊழியா்களிடம், பொதுமக்களின் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும், தங்குதடையின்றி மின்சாரம் விநியோகிப்பது, மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக் கிளைகளை அகற்றுவது, மக்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு உரிய பதிலளிப்பது உள்ளிட்ட துறைசாா்ந்த பணிகளை உரிய முறையில் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, திருமருகல் ஒன்றிய விசிக செயலாளா் சக்திவேல் உடனிருந்தாா்.