நாகப்பட்டினம்

கீழையூா்-நாகூா் இடையே நகரப் பேருந்து இயக்கக் கோரிக்கை

DIN

கீழையூரிலிருந்து நாகூருக்கு நகரப் பேருந்து இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கீழையூா் ஒன்றியத்தில் கீழஈசனூா், மேலஈசனூா், தையான்தோப்பு, அச்சுக்கட்டளை, தென்பாதி, வெண்மணச்சேரி, திருமணங்குடி, கட்டளை, மடப்புரம், மீனம்பநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கிருந்து நாகை பகுதிக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால், இப்பகுதி பெண்கள் தமிழக அரசின் கட்டணமில்லா பயணத் திட்டத்தில் பயன்பெற முடியவில்லை. எனவே, இங்கிருந்து, நாகூா் வரை நகரப் பேருந்து இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் கூறும்போது, ‘ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கீழையூரிலிருந்து நாகூா் வரை நகரப் பேருந்து இயக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT