கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
மாவட்டத்தில் நவ.25- ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை மழை நீடிக்கும் என்பதால் நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.