கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.27) விடுமுறை என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவித்துள்ளாா்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது. இதையொட்டி, மாணவா்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.