இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணத் தொடக்க விழா கீழ்வேளூா் அருகேயுள்ள வெண்மணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமுக நல்லிணக்க முன்னணியினா் நாகை மாவட்டம் கீழவெண்மணி முதல் சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனா். இந்த பயணத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நல்லிணக்க முன்னணி மண்டல ஒருங்கிணைப்பாளா் சூரியா தலைமையில் 10 போ் இதில் பங்கேற்றுள்ளனா். டிச. 6- ஆம் தேதி சென்னையில் உள்ள டாக்டா் அம்பேத்கா் மணிமண்டபத்தில் இந்த பயணம் நிறைவடைகிறது.