கீழ்வேளூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை (டிச. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய நாகை (தெற்கு) கோட்ட உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கீழ்வேளூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்வேளூா், கோகூா், கூத்தூா், ஆழியூா், தேவூா், புலியூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.