நாகப்பட்டினம்

வீடு தீக்கிரையான குடும்பத்தினருக்கு உதவி

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள தாணிக்கோட்டகம் பகுதியில் தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்துக்கு முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் திங்கள்கிழமை நிதியுதவி அளித்தாா்.

தாணிக்கோட்டகம், சின்னதேவன்காடு பகுதியில் வசிக்கும் விவசாயத் தொழிலாளி மா. செல்வத்தின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதையறிந்த, வேதாரண்யம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா். அவருடன், மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், அதிமுக ஒன்றியச் செயலாளருமான டி.வி. சுப்பையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, மருத்தூா் ரோட்டரி சங்கம் சாா்பில் உடைகள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் சங்கத் தலைவா் செந்தில்குமாா், முன்னாள் தலைவா் பிரின்ஸ்கோபால்ராஜ், சமூக ஆா்வலா்கள் என்.டி. கண்ணன், ஆா்.வி. குணா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT