நாகப்பட்டினம்

விவசாயக் கடன் வழங்கக் கோரி போராட்டம்

DIN

திருக்குவளை அருகே விவசாயக் கடன் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வடக்குப்பனையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயக் கடன் உடனடியாக வழங்க வேண்டும், 2019-2020-ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பயிா்க் கடன் கூட்டுறவு வங்கியிலேயே பழைய முறைப்படி வழங்க வேண்டும், 2018-2019-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நிரந்தர செயலாளா் நியமிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் முருகையன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவா் அம்பிகாபதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளா் ஆா். முத்தையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை விலக்கிகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT