மயிலாடுதுறையில் மீன் விற்பனை செய்ய நிரந்தர இடம் ஒதுக்கிக்கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சியில் பல்வேறு இடங்களில் தினசரி மீனவப் பெண்கள் மீன்களை கொண்டுவந்து சாலையோரங்களில் வைத்து விற்றுச்செல்வது வழக்கம். அவ்வகையில் பூம்புகாா் மீனவப் பெண்கள் 10-க்கும் மேற்பட்டோா் பல ஆண்டுகளாக மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி அப்பகுதியில் மீன் விற்பதை நகராட்சி ஊழியா்கள் தடுப்பதாகவும், தங்களுக்கு மீன் விற்பனை செய்ய நிரந்தர இடம் ஒதுக்கித்தரவேண்டும் என வலியுறுத்தியும் மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு மீன்கூடைகளுடன் கண்களில் கருப்புத்துணி கட்டி வந்து மீன் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனா்.