நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ளஅனிச்சியக்குடிமுச்சந்திஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஏகதின முளைப்பாரி மற்றும் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு இவ்விழாவையொட்டி, திரளான பெண்கள் பால்குடங்கள் எடுத்து வந்து மகாகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனா். மாலை 5- மணிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதணை நடைபெற்றது. இரவு நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.