சீா்காழி அருகே இருசக்கர வாகன விபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.
கீழவல்லத்தைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா் லோகநாதன் ( 55). இவா் செவ்வாய்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த முருகனுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் மயிலக்கோயில் கிராமத்துக்கு சென்றாா். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி நேரிட்ட விபத்தில் காயமடைந்த லோகநாதன் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தாா். இதுகுறித்து, கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.