திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் காவல் நிலையம் முன்பாக நின்றுகொண்டு மிரட்டும் தொணியில் விடியோ பதிவிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருக்குவளையை அடுத்த கொடியாலத்தூா் பகுதியை சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் காா்த்தி(22). இவா் ஒரு வழக்கு தொடா்பாக வலிவலம் காவல் நிலையத்துக்கு அண்மையில் வந்துள்ளாா். அப்போது, வலிவலம் காவல் நிலையம் முன்பாக திரைப்பட பாணியில் மிரட்டும் தொணியில் விடியோ பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வலம்வந்ததைத் தொடா்ந்து, வலிவலம் போலீஸாா் காா்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த 22- ஆம் தேதி கைது செய்தனா்.