நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது குறித்து திருப்பூர் தொழில் முனைவோர் - தொழிலாளர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சி தற்போது (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
ஆயக்காரன்புலம் - 4 ஆம் சேத்தி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் வேதா ஆயத்த ஆடை தொழிற்பூங்கா அமைய செயலாக்கம் தொடங்கி நடந்து வருகிறது. நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் டீமா எனப்படும் திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியாளர் கூட்டமைப்பினர் பங்கேற்று பேசினர். முன்னதாக தொழில் முனைவோர்களுக்கு கிராமத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் தையல் கலைஞர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.