வேதாரண்யம் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த இளம் பொறியியல் பட்டதாரிகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என நகராட்சி ஆணையா் பிரதான்பாபு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொறியியல் பட்டம் பெற்று 10 மாதங்கள் நிறைவடைந்தவா்கள் நகராட்சியில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
கட்டட உள்கட்டமைப்பு, குடிநீா் விநியோகம், சாலைகள் அமைத்தல், திடக் கழிவு மேலாண்மை போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும்.
விரும்பமுள்ள பொறியல் பட்டதாரிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான விவரங்களை நேரடியாகவும், 04369- 250452 என்ற தொலைபேசி எண் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.