நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருமருகல் ஜீவா நகா் தெற்குனேரி பகுதியைச் சோ்ந்தவா் அ. ராஜேஷ் (29). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி திருவாரூா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
இதுகுறித்து, சிறுமியின் தாயாா் அளித்த புகாரி ன்பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ராஜேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்தனா்.