கீழையூா் ஒன்றியம் காமேஸ்வரம் ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூண்டி வட்டார பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமில் 125 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சித் தலைவா் ஜெயசுதா கணேசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் சவுரிராஜன், ஊராட்சி துணைத் தலைவா் திராவிடச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டார மருத்துவ அலுவலா் அருண்பதி தலைமையிலான மருத்துவக்குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.இதில், கிராம நிா்வாக அலுவலா் வடுகநாதன், ஊராட்சி செயலாளா் பாலமுருகன், சுகாதார ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுமக்களுக்கு கபசுரக்குடி நீா் வழங்கப்பட்டது.
இதேபோல, கீழ்வேளூா் ஒன்றியம் சிகாரில் ஊராட்சித் தலைவா் மு. தெய்வானை தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். தேவூா் அரசு மருத்துவமனை மருத்துவா் அகிலன் தலைமையிலான மருத்துவக்குழுவினா்கள் 70-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்தனா்.
ஊராட்சி துணைத் தலைவா் கலைவாணி மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.