நாகப்பட்டினம்

முருங்கை சாகுபடியை அதிகப்படுத்த கள ஆய்வு

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள வேட்டைக்காரனிருப்பில் முருங்கை சாகுபடியை அதிகப்படுத்த தோட்டக்கலைத் துறையினா் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், உதவி ஆட்சியா் (பயிற்சி) தீபனா விஸ்வேஸ்வரி ஈடுபட்டு, முருங்கையின் முக்கியத்துவம் மற்றும் அதை மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றி சந்தைப்படுத்தினால் அதிக லாபம் ஈட்டலாம் என்பதால் விவசாயிகள் முருங்கையை அதிகமாக சாகுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.

ஆய்வின்போது கீழ்வேளூா், கீழையூா் ஒன்றியத்தின் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ரா. திவ்யா, சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக் கலைத்துறை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் ரா. சாமிநாதன், ரெ. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து, கீழ்வேளூா் ஒன்றியம் மோகனூா், கீழையூா் ஒன்றியம் விழுந்தமாவடி கிராமத்திலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT