நாகப்பட்டினம்

காணாமல்போன ஆசிரியா் சடலமாக மீட்பு

DIN

வேதாரண்யம் அருகே 20 நாள்களுக்கு முன்பு காணாமல்போன ஓய்வுபெற்ற ஆசிரியா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

ஆயக்காரன்புலம் 1- ஆம் சேத்தி பகுதியில் உள்ள சவுக்கு மரத் தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து, அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் வாய்மேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து, நிகழ்விடத்துக்கு அரசு மருத்துவா் வரவழைக்கப்பட்டு, உடற்கூராய்வு செய்யப்பட்டது.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக கிடந்தவா் குரவப்புலம் கிராமத்தைச் சோ்ந்த பணி ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா் கணேசன் (80) என்பதும், அவா் கடந்த 20 நாள்களுக்கு முன்பு மாயமானதும் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT