கீழ்வேளூா் அருகே விஷம் குடித்த நிலையில், மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கீழ்வேளூா் வட்டம் ராதாமங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரமேஷ் (30). இவா் தனக்கு திருமணமாகவில்லை என்ற கவலையில் இருந்து வந்ததாராம். இந்நிலையில், திங்கள்கிழமை பூச்சி மருந்தை குடித்துவிட்டு, மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் அருகே மயக்கமுற்று வாகனத்துடன் விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ், உயிரிழந்தாா். கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.