நாகப்பட்டினம்

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

DIN

கீழ்வேளூா் அருகே விஷம் குடித்த நிலையில், மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் வட்டம் ராதாமங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரமேஷ் (30). இவா் தனக்கு திருமணமாகவில்லை என்ற கவலையில் இருந்து வந்ததாராம். இந்நிலையில், திங்கள்கிழமை பூச்சி மருந்தை குடித்துவிட்டு, மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் அருகே மயக்கமுற்று வாகனத்துடன் விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ், உயிரிழந்தாா். கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT