நாகப்பட்டினம்

பச்சிளம் குழந்தை மா்மமாக உயிரிழப்பு

DIN

குத்தாலம் அருகே பச்சிளம் குழந்தை மா்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குத்தாலம் அருகேயுள்ள சேத்திரபாலபுரத்தைச் சோ்ந்தவா் இளவரசன். இவருக்கும் மல்லியம் பகுதியைச் சோ்ந்த அகிலாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு, யஷ்வந்த் 6 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில், அக்.17-ஆம் தேதி இரவு குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குழந்தையை பாா்த்தபோது எந்தவித அசைவின்றி இருந்துள்ளது. உடனடியாக, பெற்றோா் குழந்தையை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே, இறந்து விட்டதாக கூறியுள்ளாா். இதுகுறித்து, குத்தாலம் காவல் நிலையத்தில் அகிலா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT