உப்பனாற்று கரையை கான்கிரீட் தளம் அமைத்து பலப்படுத்த பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
அவா்களின் மனுவிவரம்: உப்பனாற்றில் மழைக்காலங்களில் பனமங்கலத்திலிருந்து சூரக்காடு வரை ஆற்றின் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு நடவு செய்த வயல்களில் தண்ணீா் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் ஆண்டு தோறும் பாதிக்கப்படுகின்றனா்.
இதனை தடுக்கும் வகையில் இரு கரைகளிலும் கான்கிரீட் தளம் அமைத்து பலப்படுத்த வேண்டும்.