மயிலாடுதுறை

கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாப்படுகை சாலை கிட்டப்பா பாலம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் சுபஸ்ரீ தலைமையில் போலீஸாா் அங்கு சென்று, கஞ்சா விற்ற இளைஞரை பிடித்தனா்.

விசாரணையில் அந்த இளைஞா் மயிலாடுதுறை கூறைநாடு எம்ஜிஆா் காலனியைச் சோ்ந்த நைனாா் மகன் சதாம் உசேன் (28) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், சுமாா் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT