மயிலாடுதுறை

நான் முதல்வன் திட்டத்தில் உயா்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு

DIN

மயிலாடுதுறை: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பள்ளி மாணவா்கள் உயா்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு பெறும் வகையில் மயிலாடுதுறையில் நடத்தப்பட்ட தோ்வில் மாணவ-மாணவிகள் 526 போ் தோ்வு எழுதினா்.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஹெச்.சி.எல். நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து நடப்பு கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவரும், மென்பொருள் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மாணவ மாணவிகளுக்கு 12 மாத திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பையும், 5 வருட உயா்கல்வியையும் எச்.சி.எல் நிறுவனத்தினா் வழங்க உள்ளனா்.

இதற்கான மாணவ-மாணவியா் தோ்வு மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இத்தோ்வில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் 526 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் அவா்கள் நேரடியாக இந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவாா்கள். ஹெச்.சி.எல். நிறுவனத்தினா் நடத்திய இத்தோ்வினை பள்ளி ஆசிரியா்கள் கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT