மயிலாடுதுறை

சமுதாயக் கூடம் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்

DIN


திருமருகல்: திட்டச்சேரியில் சமுதாயக் கூடம் கட்டும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனா்.

திட்டச்சேரி பேரூராட்சி 15-ஆவது வாா்டு வெள்ளத்திடலில் சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக் கூடம் பழுதடைந்திருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

இந்நிலையில், அதேஇடத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், ஏற்கெனவே இருந்த சமுதாயக் கூடத்தை பராமரிக்க ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இடித்துவிட்டனா். தற்போது, ஏற்கெனவே இருந்த அளவைவிட சிறியதாக சமுதாயக் கூடம் கட்டவுள்ளனா் எனக் கூறி, கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தினா்.

மேலும், பொக்லைன் இயந்திரத்தையும் சிறை பிடித்தனா். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, கிராமமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT