மயிலாடுதுறையில் 108 அவசர ஊா்தி பணிக்கு செவ்வாய்க்கிமை நடைபெற்ற தோ்வில் 26 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் தகுதியுள்ள 13 அவசரகால மருத்துவ உதவியாளா்கள், 13 ஓட்டுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வானவா்களுக்கு சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ், கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவா் குரு. ராகவேந்திரன், 108 ஆம்புலன்ஸ் மனிதவள மேம்பாட்டுத் துறை சுதன், திட்ட மேலாளா் மோகன், மாநில வாகன கண்காணிப்பாளா் ராஜகண்ணன், மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகி எஸ்.கண்ணன் ஆகியோா் பணிநியமன ஆணையை வழங்கினா்.