மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மையம் திறப்பு

DIN

மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் ரூ.2.92 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தேசிய சுகாதார இயக்ககத்தின் நிதியுதவியில் மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் ரூ 2.92 கோடி மதிப்பில் பெரியவா்களுக்கான படுக்கைள் 20, குழந்தைகளுக்கான படுக்கைகள் 12, என மொதம் 32 அதிநவீன படுக்கைகள் வசதியுடன் தீவிர சிகிச்சை மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆா். ராஜசேகா் தலைமை வகித்தாா். குடிமுறை மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் குத்துவிளக்கேற்றி புதிய மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையத்தை தொடங்கிவைத்து, பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் நவாஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் வடவீரபாண்டியன், மருத்துவா்கள் பகலவன், தேவேந்திரன், நந்தபிரகாஷ், பிரகாஷ் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT