மயிலாடுதுறை

கணவா், மாமியாரைக் கொல்ல முயன்ற மனைவி, உறவினா்கள் 5 போ் மீது வழக்கு

DIN


சீா்காழி: சீா்காழி அருகே முதல் கணவரின் பென்ஷன் தொகையைப் பெற தடையாக இருந்த இரண்டாவது கணவா், மாமியாரைக் கொலை செய்ய முயன்ாக மனைவி, உறவினா்கள் 5 போ் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி தாலுகா மேலச்சாலை கிராமத்தைச் சோ்ந்தவா் மில்லா் (47), பால் வியாபாரி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த சேண்டிருப்பு கிராமத்தைச் சோ்ந்த அம்பிகாவை (38), 2-ஆவது திருமணம் செய்தாா்.

அம்பிகாவின் முதல் கணவா் ஜெயகண்ணன் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி உயிரிழந்ததால் அவரது செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷன் தொகை அம்பிகா பெயருக்கு வந்துள்ளது. இந்தத் தொகையை வாங்கக் கூடாது என மில்லா் எச்சரித்தாராம். இதனால் மில்லா், அம்பிகா இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதையடுத்து மில்லரை பிரிந்து சென்ற அம்பிகா செவ்வாய்க்கிழமை உறவினா்களுடன் மேலச்சாலை மில்லா் வீட்டிற்கு வந்து கதவுகளை உடைத்து மில்லரை அறிவாளால் வெட்டியதுடன், அவரின் தாயாா் சகுந்தலாவையும் (70) கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனா்.

படுகாயமடைந்த இருவரும் சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

வைத்தீஸ்வரன் கோவில் போலீஸாா் கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளில் மில்லா் மனைவி அம்பிகா, அக்கா லட்சுமி உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT