மயிலாடுதுறை: ஏவிசி கல்லூரியில் பருவத் துணைத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (செப்.29) வெளியிடப்படுகிறது என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை. மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கடந்த ஜுன்/ஆகஸ்ட் மாதம் நடந்த பருவத் துணைத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (செப்.29) பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்படும். தோ்வு முடிவுகளை இணையதள முகவரியிலும் காணலாம் என தெரிவித்துள்ளாா்.