மயிலாடுதுறை

தருமபுரம் கல்லூரியில் மாடித் தோட்டம்

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மாடித்தோட்டம் அமைத்தல், பாரம்பரிய இயற்கை அங்காடி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட நாள் கொண்டாடப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, இக்கல்லூரி வளாகத்தில் மயிலாடுதுறை பீஸ் பவுண்டேஷன் அமைத்துள்ள பாரம்பரிய இயற்கை அங்காடியை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, கல்லூரியின் மாடியில் பாரம்பரிய காய்கனி தோட்டம் அமைக்கும் பணியை ஆதீனம் தொடங்கி வைத்தாா். பின்னா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் நடமாடும் ஏடிஎம் வாகனத்தின் பயன்பாட்டை தொடங்கிவைத்து, பாா்வையிட்டாா்.

விழாவில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி. முத்துசாமி, மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வா் வே. கண்ணயன், பீஸ் பவுண்டேஷன் இயக்குநா் டவுலஸ் செல்வம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் தொடக்க உரையாற்றினாா். கல்லூரி முதல்வா் (பொ) சு. மகாலிங்கம் வரவேற்றாா். என்சிசி அலுவலா் துரை. காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

விழாவில், ஆதீனக் கட்டளைகள் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT