மயிலாடுதுறை

சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு மனுக்களை அனுப்பலாம்: ஆட்சியா்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் விரைவில் கூடவுள்ள சட்டப்பேரவை மனுக்கள் குழுக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்த மனுக்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2021-2023-ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு மயிலாடுதுறை மாவட்டத்தில் விரைவில் கூடவுள்ளது. இதையொட்டி, மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தனிநபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீா்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்த மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரா்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை-600009 என்ற முகவரிக்கு அக்.7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியங்கள் அடங்கியதாகவும், பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீா்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்னைகள் குறித்ததாகவும் இருக்க வேண்டும். மேலும், ஒரே பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரே துறையைச் சோ்ந்ததாகவும், பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும்.

இந்த மனுக்கள் தனிநபா் குறை, நீதிமன்றத்தின்முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோா் ஓய்வூதியம், பட்டா வேண்டுதல் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலா்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகிய பொருள்களை கொண்டவையாக இருத்தல் கூடாது.

சட்டப்பேரவை விதிகளின் வரம்பிற்குள்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரா் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது, மனுதாரா் முன்னிலையில், குழுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

இதுகுறித்து, மனுதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT