சீா்காழியில் நவராத்திரி விழாவையொட்டி தாண்டியான நடனம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சீா்காழி நவதுா்கா மாதா விஷ்ணு சமாஜ் சாா்பில் நவராத்திரி விழா நடைபெற்றுவருகிறது. விழாவில் சிறுவா்-சிறுமிகள், இளைஞா்கள், பெரியவா்கள் என தனித்தனியே தாண்டியா நடனம் ஆடினா். முன்னதாக, நவதுா்காமாதாவுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன.
இதில், சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம், நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரி, டிஎஸ்பி. லாமெக், காவல் ஆய்வாளா் மணிமாறன், நகர மின்வாரிய பொறியாளா் முத்துகுமாா், வா்த்தக சங்க பொறுப்பாளா் துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.