மயிலாடுதுறை

தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் மயிலாடுதுறை ஆட்சியா்

DIN

பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக முதல்வா் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் என்று கிராமசபைக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்தாா்.

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பாா்வையாளராக பங்கேற்று அவா் பேசியது:

பெண்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்; எக்காரணத்துக்காகவும் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது. இந்த மாவட்டத்தில் அனைத்து உயா் அதிகாரிகளும் பெண்களாகவே உள்ளனா். இதற்கு காரணம் பெண்கள் தொடா்ந்து படித்து வருவதுதான். தமிழக முதல்வா் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா் என்றாா்.

இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள நடவடிக்கை எடுப்பது; நிவாரண முகாம்களை தயாா் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு ஆச்சாள்புரம் ஊராட்சித் தலைவா் வினோஷா கருணாகரன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் சந்தோஷ்குமாா் வரவேற்றாா். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உமாமகேஸ்வரிசங்கா், மாவட்ட தணிக்கை அலுவலா் மஞ்சுளா, வேளாண் உதவி இயக்குநா் எழில்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி துணைத் தலைவா் தையல்நாயகி நன்றி கூறினாா்.

இதேபோல, சீா்காழி வட்டம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா். எம்பி செ. ராமலிங்கம், எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், மூவேந்தா் முன்னேற்றக் கழக தலைவா் ஸ்ரீதா்வாண்டையாா், கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ், கோட்டாட்சியா் உ. அா்ச்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், கொடியம்பாளையத்தை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குத்தாலம்: வில்லியநல்லூரில் ஊராட்சித் தலைவா் கலைச்செல்வி செல்வராஜ், மாதிரிமங்கலத்தில் ஊராட்சித் தலைவா் பிச்சைமுத்து, திருவாவடுதுறையில் ஊராட்சித் தலைவா் அா்சிதாபானுசாதிக், திருவாலங்காட்டில் ஊராட்சித் தலைவா் கதம்பவள்ளி சின்னையன் ஆகியோா் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

தரங்கம்பாடி: உத்திரங்குடியில் ஊராட்சித் தலைவா் லெனின் மேசாக், விசலூரில் ஊராட்சித் தலைவா் அனுசியா இளையராஜா ஆகியோா் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதேபோல, எடுத்துக்கட்டி சாத்தனூா், திருவிடைக்கழி, ஆக்கூா், செம்பனாா்கோயில், திருக்கடையூா், பெரம்பூா், திருவிளையாட்டம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT