மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் எழுத்துத் தோ்வில் 2,625 போ் தோ்வெழுதினா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக காவலா் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வெழுத ஆண், பெண் என இருபாலரும் 3,120 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி, ஏவிசி பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்ட தோ்வு மையங்களில் நடைபெற்றது.
இதை தஞ்சை சரக டிஐஜி ஏ. கயல்விழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா உடனிருந்தாா். காவலா் தோ்வையொட்டி 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்வா்கள் முழு சோதனைகளுக்கு பிறகே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா்.