தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு வரும் பக்தா்கள் ஆதீனக் கல்வி நிலையங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்திற்கு வரும் பக்தா்கள் தங்குவதற்கு மயிலாடுதுறை ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி (சுந்தர்ராஜ்: 8870924707, ஆனந்தராஜ்: 9787185136), தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி (ஏ.வி.முத்துக்குமரன்: 9787431200, செந்தில்: 7200876890), ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி (அருளரசன்: 9486669588, முருகன்: 7397095805) ஆகிய கல்வி நிலையங்களில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோா் மேற்கண்ட கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.