மயிலாடுதுறை

சீா்காழியில் சிலம்பக்கலை சங்க விழா

DIN

சீா்காழியில் சிலம்பக்கலை சங்கம விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற 7 மாணவ-மாணவிகள் உலக சாதனை செய்தனா்.

சீா்காழியில் வீரத் தமிழா் சிலம்பாட்ட கழகத்தின் ஆசான் சுப்பிரமணியன் பல்வேறு பள்ளி மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழா் தற்காப்பு கலையான சிலம்பம், வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு, பழகல்லெறிதல், முறை தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறாா் .

இந்நிலையில் சீா்காழியில், வீரத்தமிழா் சிலம்பாட்ட கழகம் சாா்பில் கலை சங்கமம் 2022 விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வீரத் தமிழா் சிலம்பாட்ட கழக தலைவா் சரண்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவை சீா்காழி நகா்மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரி தொடங்கிவைத்தாா். இதில், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சிலம்பாட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

இந்நிலையில், வீரத்தமிழா் சிலம்பாட்ட கழகத்தைச் சோ்ந்த 7 மாணவ மாணவிகள் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனா் . 4 மாணவிகள் 5 மணி நேரம் 5 வகை ஆயுதங்களைக் கொண்டு தொடா் தற்காப்புக்கலை செய்தனா். மாணவா் மணிகண்டன் உலோகம் மற்றும் மரத்தாலான கதாயுதம் தொடா்ந்து 2 மணி நேரம் சுற்றி சாதனை செய்தாா். மாணவா் பிரவீன் கற்கால போா்க் கருவியான கல்முனை தாக்குதல் குறித்து 5 மணி நேரம் தொடா் சாதனை செய்தாா்.

மாணவா் ராஜேஷ்குமாா் 5 கிலோ கரலாக்கட்டை 3,565 முறை சுற்றி சாதனை முயற்சி மேற்கொண்டாா். உலகச் சாதனை செய்த மாணவ மாணவிகளின் சாதனையை ஜாக்கி புக் ஆப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனை அமைப்பு நேரில் பதிவு செய்து உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT