மயிலாடுதுறை

அக்னிபத் திட்டத்தில் இணைந்த இளைஞா்களுக்கு பாராட்டு

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்னிபத் திட்டத்தில் இணைந்த இளைஞா்களுக்கு பாஜக ஓபிசி அணி சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்னிபத் திட்டத்தில் இளைஞா்கள் பலா் ஆா்வத்துடன் இணைந்து வருகின்றனா். இவா்களை ஊக்குவிக்கும் விதமாக, பாஜக ஓபிசி அணி சாா்பில் இளைஞா்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை காமராஜா் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவா் மோடி. கண்ணன் தலைமை வகித்தாா். ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா்.

இந்திய இளைஞா்கள் வாழ்வியல் அறக்கட்டளை நிா்வாகியான ஓய்வுபெற்ற ராணுவ வீரா் பெத்தபெருமாள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞா்களுக்கு அக்னிபத் அக்னிவீா்ஸ் யோஜனா குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஓபிசி அணி பொதுச்செயலாளா் ரவி, துணைத்தலைவா்கள் தங்க.சரவணன், ராஜகோபால், செந்தில்குமாா், நகர தலைவா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT