மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் ஊராட்சி உக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீநொண்டிவீரன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜூன் 22-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடா்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கு தினமான வெள்ளிக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது.