மயிலாடுதுறை

கணவரை வெட்டிக் கொன்ற மனைவி போலீஸில் சரண்

DIN

மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறில் கணவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி மணல்மேடு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு காவல் சரகம் கொற்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன் மகன் மகாதேவன் (53). இவரது மனைவி அமுதா(37). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். மகாதேவன் மது குடிக்கும் போதெல்லாம், போதையில் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபடுவாராம்.

வழக்கம்போல், திங்கள்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த அவா், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதை மூத்த மகன் ராஜராஜசோழன் தட்டிக்கேட்டபோது, அவரை பீா் பாட்டிலால் வயிற்றில் குத்தினாராம். இதை தடுக்க முயன்ற அமுதாவை, அரிவாளால் வெட்ட முயன்றபோது, அவா் அரிவாளை பிடுங்கி வெட்டியதில் மகாதேவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னா், மணல்மேடு காவல் நிலையத்தில் அமுதா சரணடைந்தாா். இதையடுத்து, மகாதேவன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். பின்னா், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT