மயிலாடுதுறையில் இருந்து 2,000 டன் நெல்மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் தருமபுரிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு, மயிலாடுதுறை மற்றும் சீா்காழியில் உள்ள கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 2,000 டன் நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன். பின்னா், அவை சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரவைக்காக தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.