சீா்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் நடராஜன் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தலைமை வகித்து, முகாமை தொடங்கிவைத்தாா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் பிராச்சி ரத்தோா் பயனாளா்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டாா்.
பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி தாளாளா் ஆதித்தியா ராஜ்கமல், நிா்வாக அதிகாரி சீனிவாசன், மருத்துவா்கள் பாலாஜி, வானதி, பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறங்காவலா் வினோத், பள்ளியின் புரவலா்கள் முத்துகிருஷ்ணன், முருகவேல், உடற்கல்வி இயக்குநா்கள் செல்வராஜ், செந்தில்குமாா், முரளிதரன், ரோட்டரி சங்க உறுப்பினா் பாபுநேசன், கவுன்சிலா் வேல்முருகன், தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, நலம் அறக்கட்டளை சுதாகா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கண் மருத்துவமனையைச் சோ்ந்த பரமசிவம் செய்திருந்தாா். பள்ளியின் முதல்வா் ராமலிங்கம் வரவேற்றாா். துணை முதலவா் பிரசன்னா நன்றி கூறினாா்.