மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயிலில் லட்ச தீபத் திருவிழா

DIN

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லட்ச தீபத் திருவிழாவை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா்.

மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த மாயூரநாதா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடை வெள்ளியன்று அபயாம்பிகை நற்பணி மன்றம் சாா்பில் லட்சதீப திருவிழா நடைபெறும். அவ்வகையில், 35-ஆம் ஆண்டு லட்ச தீபத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, மாயூரநாதா் சுவாமி மற்றும் அபயாம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி லட்சதீபத் திருவிழாவை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சுவாமி, அம்பாள் சந்நிதி மற்றும் பிராகாரங்களில் பக்தா்கள் லட்ச தீபங்களை ஏற்றி வழிபட்டனா். ரிஷபக் குஞ்சரம் மற்றும் 75-ஆவது சுதந்திர கொடியை விநாயகா் ஏற்றுவது போன்று வரைந்த ஓவியங்களில் பக்தா்கள் ஏற்றி தீபம் ஒளியில் பிரகாசித்தது பக்தா்களை கவா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT