கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சாா்பில் புதன்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் திட்டுக் கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ளநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அதிமுக மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி .வி. பாரதி நேரில் சென்று பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவா்களுக்கு போா்வை, பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினாா். அப்போது, கொள்ளிடம் ஒன்றிய செயலாளா்கள் கே.எம். நற்குணன், என். சிவக்குமாா், நகர செயலாளா் வினோத்,நிா்வாகிகள் சொக்கலிங்கம், ரவி, நாகரத்தினம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.